This Article is From Jul 17, 2018

ஆபாசப் படம் பார்த்து 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவர்கள்

5 சிறுவர்கள் போனில் ஆபாச படங்களை பார்த்த பின்னர், பக்கத்து வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமியை கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்

ஆபாசப் படம் பார்த்து 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவர்கள்

ஹைலைட்ஸ்

  • ஆபாசப்படம் பார்த்த சிறுவர்கள் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர்
  • 5 சிறுவர்களும் 9 முதல் 14 வயது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
  • டேராடூனில் நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Dehradun:

டேராடூனில் ஆபாசப்படம் பார்த்த சிறுவர்கள் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேராடூன் நகரின் சஹஸ்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 5 சிறுவர்கள் போனில் ஆபாச படங்களை பார்த்த பின்னர், பக்கத்து வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமியை கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

போலீஸார் 5 சிறுவர்களையும் போக்ஸா சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறுவர் சீர் திருத்த இல்லத்தில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 சிறுவர்களும் 9 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து காவல் அதிகாரி கூறுகையில், இந்த சிறுவர்கள் அனைவரும் ஆபாசப்படம் பார்த்த பின்னர், சிறுமியை பலாத்காரம் செய்ய 2 நாட்களுக்கு முன்பே திட்டமிட்டுள்ளனர். இணைய தளத்தில் ஆபாச படங்கள் எளிதில் கிடைப்பதால் பல சிறுவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதும் நடந்து வருகிறது.

மத்திய அரசு ஆபாச படங்களை வெளியிடும் இணைய தளங்களை தடை செய்துள்ளதாகக் கூறினாலும் இன்னும் பல ஆபாச பட இணைய தளங்கள் தடை செய்யப்படாமல்தான் உள்ளது. இது பல சிறுவர்களின் மன நிலையை சீரழித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

.