This Article is From Sep 15, 2018

ஜம்மூ - காஷ்மீரில் என்கவுன்ட்டர்… 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

இந்த என்கவுன்ட்டரால், பாரமுல்லா - காசிகுந்துக்கு இடையிலான ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது

குல்காம் என்கவுன்ட்டர்: 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Srinagar:

 ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் பாதுகாப்புப் படையால், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. 2 தீவிரவாதிகளை, பாதூகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த என்கவுன்ட்டரால், பாரமுல்லா - காசிகுந்துக்கு இடையிலான ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

தெற்கு காஷ்மீரின் சவுகாம் பகுதியில் இன்னும் நிறைய தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத் துறை தகவல் கொடுத்துள்ளதை அடுத்து, அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் பாதுகாப்புப் படையினர்.

தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிசூடு நடத்தியதைத் தொடர்ந்து இந்த என்கவுன்ட்டர் ஆரம்பமானது என்று தெரிகிறது.

.