This Article is From Apr 17, 2020

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,759 ஆக உயர்வு! 420 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,759 ஆக உயர்வு! 420 பேர் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறதென தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,759ஆக உயர்வு
  • கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ளதாக தகவல்
  • தமிழகத்தில் இன்று 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
New Delhi:

இந்தியாவில் இன்று புதிதாக 826 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,759 ஆக உயர்ந்துள்ளது. இன்று 28 பேர் உள்பட மொத்தம் 420 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது. 


மேலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், 119 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 14 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள். 

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 219 பேருக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 126 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 79 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 70 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 65 பேருக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் 59 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 


மத்திய அரசு நேற்று நாட்டில் உள்ள சுமார் 700 மாவட்டங்களில் 170 மாவட்டங்களை கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அறிவித்தது. அவற்றில் 123 மாவட்டங்கள் மிக மிக பாதிக்கப்பட்ட பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் டெல்லியில் உள்ள அனைத்து 9 மாவட்டங்களும் வருகின்றன. 

மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ரா ஆகிய மெட்ரோ நகரங்களில் உள்ள சில மாவட்டங்களும் ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை சிவப்பு மண்டலங்கள் என்றும் அதிகாரிகள் அழைக்கின்றனர். இவற்றில்தான் 80 சதவீத கொரோனா பாதிப்புகள் இருக்கின்றன. 

சிவப்பு மண்டலம் அல்லது ஹாட்ஸ்பாட்டிற்கு அடுத்த ஆபத்தான மண்டலம் என்ற பகுதியில் 207 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இங்கும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.