This Article is From Jun 20, 2019

இமாச்சல பிரதேசத்தில் 500 அடி பள்ளத்திற்குள் பஸ் விழுந்து விபத்து! 15 பேர் உயிரிழப்பு!!

பயணிகள் 50 பேரை ஏற்றிக் கொண்டு பஞ்சாரில் இருந்து கடாகுஷானியை நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

இமாச்சல பிரதேசத்தில் 500 அடி பள்ளத்திற்குள் பஸ் விழுந்து விபத்து! 15 பேர் உயிரிழப்பு!!

மீட்பு பணி மேற்கொள்ளப்படும் காட்சி

Chandigarh:

இமாச்சல பிரதேசத்தில் 50 பேரை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார் பேருந்து ஒன்று பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. 

இமாச்சல பிரதேசத்தின் பஞ்சாரில் இருந்து கடாகுஷானியை நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. 

பஸ்ஸில் இருந்த 50 பேரில் சிலர் கூரையின் மீதும் அமர்ந்து பயணம் செய்தனர். அவர்களில் பெரும்பாலானோர்தான் உயிரிழந்துள்ளது. படுகாயங்களுடன் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயம் அதிகம் என்பதால் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் உயிரிழக்க நேரிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

.