This Article is From Sep 03, 2018

மியான்மரில் 2 பத்திரிகையாளர்களுக்கு 7 ஆண்டு சிறை..!

இந்தத் தீர்ப்பு, ஊடக சுதந்திரத்துக்கு எதிரானது என்று பெரும் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது

மியான்மரில் 2 பத்திரிகையாளர்களுக்கு 7 ஆண்டு சிறை..!
Yangon, Myanmar:

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்கள் குறித்தான பிரச்னை விஸ்வரூபம் எடுத்த போது, அது குறித்து செய்தி சேகரித்த 2 பத்திரிகையாளர்கள், மியான்மர் பாதுகாப்புச் சட்டத்தை மீறியுள்ளனர் என்று கூறி 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.

இந்தத் தீர்ப்பு, ஊடக சுதந்திரத்துக்கு எதிரானது என்று பெரும் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. 

தீர்ப்பளித்த மியான்மர் நீதிபதி, ‘2 பத்திரிகையாளர்களும் தேசிய பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக குற்றம் செய்துள்ளனர். ஆகவே, அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார். 
 

.