This Article is From Jun 14, 2020

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 38 பேர் உயிரிழப்பு! 1,974 பேர் பாதிப்பு!!

இன்று 1,138 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 24,547 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 38 பேர் உயிரிழப்பு! 1,974 பேர் பாதிப்பு!!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து 15வது நாளாக ஆயிரத்தினை கடந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 1,974 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவாக 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்த அளவில் இன்று 1,415 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,859 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 347 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 1,138 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 24,547 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 1,974 பேரில் ஆண்கள் 1,170 பேரும் பெண்கள் 804 பேரும் அடங்குவார்கள். இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 27,520 பேர் ஆண்கள், 17,124 பேர் பெண்கள் ஆவார்கள். இதுவரை 7,10,599 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 245 மணி நேரத்தில் 18,782பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

.