This Article is From Dec 09, 2018

'ஏதை செய்தாலும் பிளான் பண்ணி செய்ய வேண்டும்'-திருடன் கற்ற பாடம்

இணையத்தில் வெளியான இந்த சிரிப்பூட்டூம் வீடியோ காட்சி பார்ப்போரை கவர்ந்துள்ளது

'ஏதை செய்தாலும் பிளான் பண்ணி செய்ய வேண்டும்'-திருடன் கற்ற பாடம்

தாய்லாந்தை சேர்ந்த திருடன் ஒருவன் கடைக்குள் திருட முயன்றபோது அவனை புத்திசாலிதனமாக பிடித்த கடை உரிமையாளரின் வீடியோ காட்சி சமீபத்தில் இணையத்தை சிரிப்பில் ஆழ்த்தியது.

அங்குள்ள பத்திரிக்கையில் வெளியான செய்தியின்படி, இச்சம்பவம் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி மாலை சுமார் 6 மணி அளவில் சோன்பூரியில் உள்ள நகைக்கடையில் நடந்தது.

சுபாச்சாய் பான்தோன்கு என்னும் 27 வயதான அந்த நபர் நகைக்கடைக்குள்‌ வந்து தங்க செயினை அணிந்து பார்ப்பது போல் போட்டுவிட்டு கதவு வழியாக ஓடிவிடலாம் என பலத்த திட்டம் ஒன்று தீட்டினார்.

தீட்டமிட்ட படி ஓடும் போது உரிமையாளரால் பூட்டப்பட்ட கதவின் மேல் மோதி விழுந்தான்.

இணையத்தில் வெளியான இந்த சிரிப்பூட்டூம் வீடியோ காட்சி பார்ப்போரை கவர்ந்துள்ளது.

 

Click for more trending news


.