This Article is From Aug 16, 2018

தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

தேனி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

கேரளா, தமிழ்நாடு, கர்நாடகாவின் ஒரு சில கடலோர பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

மேலும், தேனி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரியின் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதி முதல் கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.