This Article is From Nov 05, 2018

தமிழக மக்களுக்கு கவர்னர், முதல்வர் தீபாவளி வாழ்த்து

நாடு முழுவதும், தீப திருநாள் ஒளியை பரப்பட்டும் என கவர்னர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மக்களுக்கு கவர்னர், முதல்வர் தீபாவளி வாழ்த்து

தீப ஒளியைப்போல மக்கள் வாழ்வும் ஒளிமயமாக வேண்டும் என தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்களுக்கு கவர்னர் பன்வாரி லால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது வாழ்த்துச் செய்தியில், தீபத் திருநாளில் விளக்குகள் ஒளிர்வதைப் போன்று மக்களின் வாழ்வும் ஒளிர வேண்டும் என வாழ்த்தியுள்ளார். நாடு முழுவதும், இந்த தீப திருநாள் ஒளியை பரப்பட்டும் என புரோகித தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துச செய்தியில், நரகாசூரனை கொன்றதன் நினைவாக தீபாவளியை கொண்டாடுகிறோம். இந்த பண்டிகை மகிழ்ச்சியையும், வளத்தையும் அளிக்கட்டும் என்று கூறியுள்ளார்.

துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில், மக்களின் துன்பங்கள் அனைத்தும் நீங்கி அவர்களது வாழ்வில் மகிழ்ச்சியையும், அமைதியும் ஏற்படுவதாக என்று கூறியுள்ளார்.

மேலும், பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

.