This Article is From Sep 24, 2018

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சத்தை இழப்பீடாக வழங்க தமிழக முல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு

நீரில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் கொண்டையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த செல்வன், தமிழரசன் என்ற 2 பேர் கடந்த 15-ம்தேதி ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதேபோன்று, காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம், கல்குளம் மதுரா சூரிய குப்பதை சேர்ந்த சசி, மங்கை மற்றும் கமலா ஆகியோர் குடிநீர் எடுக்கும்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறந்தனர்.

இந்த நிலையில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தாருக்கும் இழப்பீடாக தலா ரூ. 1 லட்சத்தை வழங்குவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

.