This Article is From Jul 19, 2020

சட்டமன்ற கூட்டத்திற்கு தயாராகும் காங்கிரஸ்: ராஜஸ்தானில் தொடரும் அரசியல் குழப்பம்!!

ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்தி முதல்வர், அடுத்த வாரம் சட்டமன்ற கூட்டத்தினை கூட்ட விரும்புவதாக ஆளுநரிடம் சுட்டிக்காட்டியதாக தெரிய வருகின்றது.

சட்டமன்ற கூட்டத்திற்கு தயாராகும் காங்கிரஸ்: ராஜஸ்தானில் தொடரும் அரசியல் குழப்பம்!!

சமீபக காலமாக ராஜஸ்தான் மாநில அரசியலில் குழப்பங்கள் தொடர்ந்து வருகின்றன. ஆளும் காங்கிரசின் மாநில முதல்வர் அசோக் கெஹ்லோட்டுக்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட் போர் கொடியை உயர்த்தியதையடுத்து காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த இரண்டு பிராந்திய கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் காங்கிரசுக்கான தங்களது ஆதரவினை திரும்பப்பெற்றனர்.

இந்நிலையில் மீண்டும் அவர்கள் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, அடுத்த வாரம் சட்டமன்ற கூட்டம் நடத்த முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்த முதல்வர், அடுத்த வாரம் சட்டமன்ற கூட்டத்தினை கூட்ட விரும்புவதாக ஆளுநரிடம் சுட்டிக்காட்டியதாக தெரிய வருகின்றது.

சபாநாயகர் அனுப்பிய தகுதிநீக்க நோட்டீஸ் தொடர்பாக சச்சின் பைலட் தரப்பு தாக்கல் செய்த மனுவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட பின்னர், செவ்வாய்க்கிழமைக்குப் பிறகுதான் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் அழைப்பு விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

.