This Article is From Sep 20, 2018

7 குட்டிகளைக் காக்க நாகப்பாம்புடன் சண்டையிட்ட நாய்

வீட்டின் மாடிப்படிகளுக்கு கீழே பெண் நாயும் அதன் 7 குட்டிகளும் வசித்து வந்தன. நாகப்பாம்பு கடித்ததில் 2 குட்டிகள் உயிரிழந்தன

7 குட்டிகளைக் காக்க நாகப்பாம்புடன் சண்டையிட்ட நாய்

குட்டிகளை காக்க நாகப்பாம்பை பார்த்து நாய் குரைக்கும் காட்சி

Bhadrak (Odisha):

ஒடிசாவில் நாகப்பாம்பிடம் இருந்து தனது குட்டிகளைக் காக்க, நாய் ஒன்று நடத்திய பாசப்போராட்ட காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. ஒடிசாவின் பத்ராக் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடிப்படியில், நாய் ஒன்று தனது 7 குட்டிகளுடன் வசித்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாடிப்படிக்கு கீழே நாய் குரைக்கும் சத்தத்தை கேட்டு மக்கள் அங்கு திரண்டனர். அப்போது, நாகப்பாம்பிடம் இருந்து தனது குட்டிகளை காக்க நாய் குரைத்துக் கொண்டிருந்தது.

0b4u6q9c

நாயை நோக்கி சீறும் நல்ல பாம்பு

இதையடுத்து பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் பாம்பை பிடித்து நாய்க்குட்டிகளை மீட்டனர். இதற்கிடையே நாகப்பாம்பு கடித்ததில் விஷம் ஏறி 2 நாய்க்குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தன.

evpvtbr

பிடிபட்ட பாம்பை உயர்த்திக் காட்டும் பாம்பாட்டி

இந்தக் காட்சியை அங்கிருந்தவர்கள் பதிவு செய்து இணைய தளத்தில் பரவ விட்டனர். குட்டிகளைக் காக்க நாய் நடத்திய சண்டை வைரலாக பரவி வருகிறது.

.