This Article is From Sep 15, 2020

உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து தகவல்கள் ஏதும் இல்லை எனவே இழப்பீடும் இல்லை!

1 கோடிக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்தும் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வந்ததாக அமைச்சகம் ஒப்புக் கொண்ட மத்திய அரசு தனது எழுத்துப்பூர்வ பதிலில், மத்திய தொழிலாளர் மந்திரி சந்தோஷ்குமார் கங்வார், "இதுபோன்ற தரவு எதுவும் பராமரிக்கப்படவில்லை. மேற்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு கேள்வி எழவில்லை" என்றும் கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்த பதிலானது எதிர் கட்சியினர் மத்தியில் பெரும் ஆவேசத்தினை ஏற்படுத்தியுள்ளது.

New Delhi:

கொரோனா முழு முடக்க காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிலர் உயிரிழந்தது குறித்து எவ்வித தகவல்களும் அரசாங்கத்திடம் இல்லை. எத்தனை தொழிலாளர்கள் உயிரிழந்தார்கள் என்பது அரசாங்கத்திற்கு தெரியாது. எனவே அவர்களுக்கான இழப்பீடு அல்லது நிவாரணம் குறித்து எந்த அவசியமும் ஏற்படவில்லை என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாள் அமர்வில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக நாடு தழுவிய முழு முடக்கம் விதிக்கப்பட்டதிலிருந்து முதல் - தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து அரசாங்கத்திடம் ஏதேனும் தரவு இருக்கிறதா என்றும், அவர்களுக்கான இழப்பீடுகள் குறித்தும் அரசிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

1 கோடிக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்தும் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வந்ததாக அமைச்சகம் ஒப்புக் கொண்ட மத்திய அரசு தனது எழுத்துப்பூர்வ பதிலில், மத்திய தொழிலாளர் மந்திரி சந்தோஷ்குமார் கங்வார், "இதுபோன்ற தரவு எதுவும் பராமரிக்கப்படவில்லை. மேற்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு கேள்வி எழவில்லை" என்றும் கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்த பதிலானது எதிர் கட்சியினர் மத்தியில் பெரும் ஆவேசத்தினை ஏற்படுத்தியுள்ளது.

"பூட்டப்பட்ட காலத்தில் எத்தனை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தனர், எத்தனை வேலைகள் இழந்தன என்பது மோடி அரசுக்குத் தெரியாது. நீங்கள் கணக்கிடவில்லை என்றால், இறப்புகள் நடக்கவில்லையா? அரசாங்கத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. அவர்களின் இறப்பை உலகம் கண்டது. எந்த தகவலும் இல்லாத ஒரு மோடி அரசு உள்ளது ”என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

.