This Article is From Aug 20, 2020

வருவாய் இழப்பால் ஆட்டோவை கொளுத்திய ஓட்டுநருக்கு புதிய ஆட்டோ வழங்கிய மு.க.ஸ்டாலின்!

வாங்கப்பட்ட புதிய ஆட்டோவின் சாவியை தாண்டமுத்து இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

வருவாய் இழப்பால் ஆட்டோவை கொளுத்திய ஓட்டுநருக்கு புதிய ஆட்டோ வழங்கிய மு.க.ஸ்டாலின்!

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதலே, அரசு விதித்த ஊரடங்கு உத்தரவுகளால் பலரது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான தாண்டமுத்து, சில நாட்களுக்கு முன்னர், வருவாய் இழப்பால் தன் ஆட்டோவை தீயிட்டுக் கொளுத்தினார். இந்நிலையில் அவருக்கு உதவும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதிய ஆட்டோவை வழங்கியுள்ளார். 

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதலே, அரசு விதித்த ஊரடங்கு உத்தரவுகளால் பலரது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு சமயத்தில் ஆட்டோ உட்பட எந்தத் தனியார் வாகனங்கள் இயக்குவதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. 

இதனால் வருமானம் இழந்து வாடியுள்ளார் தாண்டமுத்து. தொடர்ந்து ஆட்டோவுக்கு இன்சூரன்ஸ் புதுப்பிக்கவும், எஃப்.சி செய்யவும் பணமில்லாமல் தவித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த தாண்டமுத்து, கடந்த 7 ஆம் தேதி, தன் ஆட்டோவுக்குத் தீ வைத்து கொளுத்தியுள்ளார். 

அயனாவரம் பகுதியைச் சேர்ந்த தாண்டமுத்துவின் கதையை அறிந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவரை நேரில் சந்தித்துப் புதிய ஆட்டோவை வாங்கிக் கொள்ள நிதியுதவி அளித்தார். 

இந்நிலையில் வாங்கப்பட்ட புதிய ஆட்டோவின் சாவியை தாண்டமுத்து இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடமிருந்து பெற்றுக் கொண்டார். 

.