This Article is From Feb 15, 2019

காதலர் தினத்தில் திருநங்கையை மணந்த இளைஞர்!

பிப்ரவரி 14 ஆம் தேதி, தன் திருநங்கை காதலியை திருமணம் செய்தார் ஜுனைத் கான்.

காதலர் தினத்தில் திருநங்கையை மணந்த இளைஞர்!

இந்து முறைபடி இவர்களின் திருமணம் நடைபெற்றது

Indore:

உலகின் மிக தூய்மையான புனிதமான உணர்வு காதல் என்பார்கள். அது உண்மைதான் என மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் நிருப்பித்துள்ளார்.

காதல் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி, தன் திருநங்கை காதலியை திருமணம் செய்தார் ஜுனைத் கான்.

 

fife0hrk

இஸ்லாமிய முறைப்படியும் திருமணம் செய்ய உள்ளனர் இவர்கள்

தன் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி, திருநங்கையான ஜெயா சிங் பர்மரை, இந்து முறைப்படி திருமணம் செய்தார் ஜுனைத் கான். இஸ்லாமிய முறைப்படியும் அவர்கள் திருமணம் செய்ய உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த ஜூனைத் கான் – ஜெயா சிங் ஜோடி, காதலர் தினத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

‘எனது குடும்பம் இந்த திருமணத்தை ஏற்க வேண்டும். அவர்கள் ஏற்கவில்லை என்றாலும் ஜெயா உடன்தான் நான் வாழப் போகிறேன்' என ஜூனைத் கான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

‘ஜுனைத்தின் பெற்றோர்கள் இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்றாவது ஒருநாள் அவர்கள் எங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு' என ஜெயா சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


(With Inputs From ANI)

.