This Article is From Aug 21, 2018

மகள்களைக் கொன்ற ஆத்திரத்தால், கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவர் கைது

கர்ப்பிணியாக இருந்த பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளனர்

மகள்களைக் கொன்ற ஆத்திரத்தால், கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவர் கைது

அமெரிக்காவின் கொலாராடோவில், கர்ப்பிணியாக இருந்த பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளனர். இந்த வழக்கில் அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிறிஸ்டோபர் லீ வாட்ஸ் என்ற அந்த நபருக்கு, வேறொரு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் தனது மனைவியுடன் பேசி, தங்கள் திருமண வாழ்வை முடித்துக் கொள்ளலாம் என்று ஆகஸ்ட் 13-ம் தேதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.

பேசி முடித்தவுடன் வாட்ஸ் அழுது கொண்டே கீழே வந்திருக்கிறார். மாடியில் இருந்த அறையில் இரண்டு பெண் குழந்தைகளுடன் அவரது மனைவி இருந்துள்ளார். வாட்ஸ் வெளியே வந்த அந்த நேரத்தில், 4 வயது மற்றும் 3 வயதான தனது இரண்டு பெண் குழந்தைகளையும் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார் அவரது மனைவி. இதனால் ஆத்திரம் அடைந்த வாட்ஸ், அவரது மனைவியை கொன்றுள்ளார். அவரது மனைவி 15 வார கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கொன்றவுடன், மூன்று பிணங்களையும் அருகில் இருந்த எண்ணெய் சேமிப்புக் கிடங்குக்க்ள் வீசிச் சென்றுள்ளார். இது அனைத்தையும் போலீஸார் விசாரணையின் போது வாக்கு மூலமாக அளித்துள்ளார் வாட்ஸ். கொலை, கரு கலைப்பு ஆகிய வழக்குகள் அவர் மீது பதியப்பட்டுள்ளது.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.