This Article is From Aug 05, 2019

டெல்லியில் மெட்ரோ ரயிலின் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை

சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது 6:35 மணியளவில் வந்த ரயிலின் முன்பு பாய்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

டெல்லியில் மெட்ரோ ரயிலின் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை
New Delhi:

டெல்லியில் இன்று காலை மெட்ரோ ரயிலுக்கு முன்னால் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று காலை 7:13 மணியளவில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 2ஆம் நம்பர் பிளாட் பார்ம் ரயிலின் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்நபரின் அடையாளம் காண எந்தவொரு ஆவணங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரி தெரிவித்தனர்

மெட்ரோ அதிகாரிகள் இது குறித்து பேசியபோது இந்த சம்பவம் அதிகாலை ரெட் லைன் மெட்ரோ நிலையத்தில் நடந்ததாக கூறினர். சுமார் ஒரு மணி நேரம் ரயில்வே சேவைகள் நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது 6:35 மணியளவில் வந்த ரயிலின் முன்பு பாய்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. இறந்தவரின் உடல் ஜிடிபி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

இறந்தவரை அடையாளம் காண விசாரணை நடைபெற்று வருகிறது. 

.