This Article is From Aug 16, 2019

கர்ப்பிணி மனைவி, மகன் மற்றும் பெற்றோரை சுட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபர்

ஓம் பிரகாஷ் பட்டாச்சார்யா (38) அவரது மனைவி நிகிதா (30), ஆர்யா கிருஷ்ணன் (4) அவரது பெற்றோர் நாகராஜ பட்டாச்சார்யா மற்றும் ஹேமா (60) ஆகியோர் தங்கியிருந்த ரிசார்ட்டுக்கு அருகிலுள்ள வயலில் குடும்பத்துடன் இறந்து கிடந்துள்ளனர்.

கர்ப்பிணி மனைவி, மகன் மற்றும் பெற்றோரை சுட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபர்

அதிகாலை 3 மணிக்கு ரிசார்ட்டில் இருந்து வெளியேறி வயலுக்கு சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். (Representational)

Bengaluru:

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள குண்டலுபேட்டில்  ஓம் பிரகாஷ் என்ற நபர் தன் கர்ப்பிணி மனைவி, மகன், மற்றும் பெற்றோரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.  

வியாபாரத்தில் ஏற்பட்ட பெரும் இழப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட கடன்களை சமாளிக்க முடியாமல் இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

குடும்பத் தலைவரான ஓம் பிரகஷ் தன் மனைவி மற்றும் மகனை நெற்றியில் சுட்டுக் கொன்று விட்டு பின் தன் வாயிலே சுட்டு கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. எதிர்ப்புக்கான அறிகுறிகள் எதுவும் கிடைக்கவில்லை. மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்று சாம்ராஜ்பேட்டை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

ஓம் பிரகாஷ் பட்டாச்சார்யா (38) அவரது மனைவி நிகிதா (30), ஆர்யா கிருஷ்ணன் (4) அவரது பெற்றோர் நாகராஜ பட்டாச்சார்யா மற்றும் ஹேமா (60) ஆகியோர் தங்கியிருந்த ரிசார்ட்டுக்கு அருகிலுள்ள வயலில் குடும்பத்துடன் இறந்து கிடந்துள்ளனர். 

அதிகாலை 3 மணிக்கு ரிசார்ட்டில் இருந்து வெளியேறி வயலுக்கு சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். 

.