This Article is From Sep 07, 2019

குடியரசுத் தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா கடிதம்!

இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம் ஆக.28 அன்று மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரைத்திருந்தது.

குடியரசுத் தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா கடிதம்!

நீதிபதி வி.கே.தஹில் ரமணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

Chennai:

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி தனது பதவியை இன்று ராஜினாமா செய்வதாக கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே.தஹில் ரமணி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வந்த மூன்று நாட்கள் ஆன நிலையில் அவர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வந்தன. 

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தஹில் ரமனி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்தியாவின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான இவர், தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு பெண் நீதிபதிகளில் ஒருவராவார். 

இவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய போது 2017ஆம் ஆண்டு பில்கிஸ் பானோ பாலியல் (Bilkis Bano) வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார்.

இந்நிலையில், ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலிஜீயம் குழு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே.தஹில் ரமணியை மேகாலயா மாநில தலைமை நீதிபதியாகவும், தற்போது மேகலாய மாநில தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற முடிவு செய்த உச்ச நீதிமன்ற கொலிஜீயம் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது. 

இதனையடுத்து, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு நியமிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தஹில் ரமாணி கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றும் முடிவை எதிர்த்து ராஜினாமா செய்வதாக கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
 

.