This Article is From Dec 08, 2018

ஜம்மு காஷ்மீர்: 100 மீட்டர் பள்ளத்தில் பேருந்து விழுந்து 11 பேர் உயிரிழப்பு

வளைவில் வேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர்: 100 மீட்டர் பள்ளத்தில் பேருந்து விழுந்து 11 பேர் உயிரிழப்பு

விபத்து நேர்ந்த இடத்தில் மீட்பு பணிகள் நடக்கும் காட்சி

Srinagar:

ஜம்மு காஷ்மீரில் 100 மீட்டர் பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். வளைவில் வேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் விழுந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. லோரான் பகுதியில்  இருந்து கிளம்பிய பேருந்து பூஞ்ச் நகரை நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. 


பூஞ்ச் நகரை நெருங்கிக் கொண்டிருந்தபோது, மலைப்பாதை வளைவின் வழியே பேருந்து வேகமாக சென்றது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 100 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தில் விழுந்தது. 


இந்த சம்பவத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மாண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

.