This Article is From Jan 21, 2020

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8%ஆக குறையும்: ஐ.எம்.எஃப் கணிப்பு

சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 4.8 சதவீதமாகக் குறைத்துள்ளது, இது கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 1.3 சதவீதமாக குறைந்துள்ளது.

வங்கி அல்லாத நிதித்துறையில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்கிறார் கீதா கோபிநாத்.

Davos:

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சரிவு, உலக அளவிலும்கூட பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உலகளாவிய வளர்ச்சி கணிப்பை 0.1 சதவீதமாகக் குறைத்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக என்டிடிவிக்கு கீதா கோபிநாத் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது, சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 4.8 சதவீதமாகக் குறைத்துள்ளது, இது கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 1.3 சதவீதமாக குறைந்துள்ளது.

உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்திய பொருளாதாரத்தின் அளவைக் கருத்தில் கொண்டு, நீங்கள் இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க கீழ்நோக்கிய திருத்தம் செய்தால், அது உலகளாவிய வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அதனால், 2019ம் ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சியை 0.1 சதவீதம் குறைத்துள்ளோம். அதில் பெரும்பகுதி இந்தியாவிற்கான தரமதிப்பீட்டிலிருந்து வருகிறது என்று கோபிநாத் தெரிவித்துள்ளார். 

2019 நிதியாண்டின் முதல் காலாண்டுகளில் இருந்து வெளிவந்த எண்களைப் பார்த்தால், அவை கடந்த அக்டோபரில் நாங்கள் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தன, நீங்கள் அந்த எண்களை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால், இந்தியாவின் கடன் வளர்ச்சியின் சரிவே 2019 மற்றும் 2020ம் ஆண்டிற்கான எங்கள் கணிப்புக்கான காரணியாக உள்ளது என்று அவர் கூறினார். 

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் திட்டத்திற்கு கீழ்நோக்கிய திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக நம்புகிறது. வங்கி அல்லாத நிதித்துறையில் ஏற்பட்ட அழுத்தம் மற்றும் கடன் வளர்ச்சியில் சரிவு ஆகியவற்றின் காரணமாக உள்நாட்டு தேவை எதிர்பார்த்ததை விட மிகக் குறைந்துள்ளது. 

இதில் கீதா கோபிநாத் மிகப்பெரிய பிரச்சினையாக கூறுவது, நிதி இடைவெளியை தான். "நீங்கள் நிதித் துறைகளைப் பார்த்தால், குறிப்பாக வங்கி சாராத நிதி நிறுவனங்களுடன் உங்களுக்கு அழுத்தம் இருக்கிறது.

கடன் வளர்ச்சியில் மிகப்பெரிய பலவீனத்தை நாங்கள் கண்டிருக்கிறோம், வணிக உணர்வு சந்தைகளில் கடன் வழங்குவதில் ஆபத்து வெறுப்பைக் கடுமையாக அதிகரிப்பதாகத் தெரிகிறது. அதனுடன், கிராமப்புற வருமான வளர்ச்சியில் பலவீனம் ஏற்பட்டுள்ளது. 

எனினும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2021 முதல் 6.5 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று ஒரு எதிர்பார்ப்பு உள்ளது, இது "பண மற்றும் நிதி தூண்டுதலால் ஆதரிக்கப்படுகிறது, இத்துடன் எண்ணெய் விலைகளை பொறுத்தும் அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். 

.