This Article is From Feb 26, 2019

‘’ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார் மோடி’’ – பிரகாஷ் ஜவடேகர் பேட்டி

தீவிரவாத முகாம்கள் மீதான விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து மத்திய அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘’ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார் மோடி’’ – பிரகாஷ் ஜவடேகர் பேட்டி

விமானப்படை நடத்தியிருக்கும் தாக்குதல் இன்று நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

New Delhi:

விமானப்படையின் அதிரடி தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த தாக்குதல் மிகவும் அவசியமானது என்றும், ராணுவத்திற்கு மோடி முழு சுதந்திரம் அளித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

விமானப்படை இன்று காலை நடத்தியிருக்கும் அதிரடி தாக்குதல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சுமார் 1,000 கிலோ எடைகொண்ட வெடிகுண்டுகள் அப்போது வீசப்பட்டன. இதில் 300-க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அதிகாலையில் நடைபெற்ற இந்த திடீர் அட்டாக், 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள பாலகோட், சகோதி, முசாபர்பாத் ஆகிய இடங்களில் விமானப்படை குண்டுமழை பொழிந்துள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்த் சிங், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விமானப்படையின் அதிரடி குறித்து மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ‘' இந்த நேரத்தில் இந்த தாக்குதல் மிகவும் அவசியமான ஒன்று. பிரதமர் மோடி ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்திருக்கிறார். தற்போது ஒட்டுமொத்த நாடும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு ஆதரவாக நிற்கிறது'' என்று கூறியுள்ளார்.

 

மேலும் படிக்க: ‘ஜெய்ஷ் அமைப்பின் முக்கியப் புள்ளிகள் கொல்லப்பட்டனர்!'- இந்திய அரசு திட்டவிட்டம்

.