This Article is From Apr 10, 2020

ஒரேநாளில் 96 பேருக்கு கொரோனா தொற்று! பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ஆக இருந்த நிலையில், இன்று 834 ஆக அதிகரித்துள்ளது.

ஒரேநாளில் 96 பேருக்கு கொரோனா தொற்று! பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 96 பேருக்கு கொரோனா தொற்று

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
  • பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது
  • கொரோனா தொற்று சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது-

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ஆக இருந்த நிலையில், இன்று 834 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக இன்று 96 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 96 பேரில் 84 பேர் ஒரே குழுவில் இருந்தவர்கள். 

மேலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று ஒரே நாளில் மட்டும், 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேபோல், கொரோனா பாதித்து சிகிச்சைப் பெறுபவர்களில் 6 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது.

மழையால் கொரோனா பரவுமா என்பது குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

.