This Article is From May 10, 2020

மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும்: ரஜினிகாந்த் கடும் தாக்கு

முன்னதாக தமிழகத்தில் முழு முடக்க நடவடிக்கை முடியும் வரை மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும்: ரஜினிகாந்த் கடும் தாக்கு

தேசிய அளவில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முழு முடக்க உத்தரவு அமலாக்கப்பட்டது. இதன் காரணமாக அத்தியாவசியமற்ற தேவைகள் முடக்கப்பட்டன. இந்நிலையில் மத்திய அரசு சில தளர்வுகளை சமீபத்தில் அறிவித்தது. அதன் தொடரச்சியாக தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்தது.

இந்நிலையில் மதுக்கடையில் மதுபாட்டில்களை வாங்க சில கி.மீ துரத்திற்கு மக்கள் வரிசையாக நின்றிருந்தனர். ஏற்கெனவே தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கையானது 6,535 ஆக உயர்ந்துள்ள நிலையில் டாஸ்மாக் திறப்பு என்பது நோய்த்தொற்று பரவலை எளிதாக்கும் என பலர் விமர்சித்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக நடிகர் ரஜினிகாந்த் “இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்” என தற்போது ட்விட் செய்துள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் முழு முடக்க நடவடிக்கை முடியும் வரை மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.