This Article is From Oct 12, 2018

கோவையில் 50 அடி பள்ளத்தில் விழுந்த வேன்: 5 பேர் பலி!

கோயம்புத்தூரில் உள்ள கடம்பாறையில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று, 50 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது

கோவையில் 50 அடி பள்ளத்தில் விழுந்த வேன்: 5 பேர் பலி!

கோயம்புத்தூரில் உள்ள கடம்பாறையில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று, 50 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது. இந்த கோர விபத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.

மாவல்பூர் பழங்குடியின மக்கள், கோட்டூரிலிருந்து அவர்களது வீடுகளுக்கு வேன் மூலம் திரும்பியுள்ளனர். மாவல்பூரினர் 18 பேர் வேன் ஒன்றில் வந்து கொண்டிருந்தனர். அப்போது வேன் எதிர்பாராத விதமாக 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 5 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். காயமடைந்த மற்றவர்கள் அருகிலிருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேன் ஓட்டுநர், தாறுமாறாக வண்டி ஓட்டியது தான் விபத்துக்குக் காரணம் என்று காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வேனின் ஓட்டுநருக்கும் பலத்தக் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.