This Article is From Jul 20, 2020

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி பாதுகாப்பனவை!

சீனாவின் சினோவாக் பயோடெக், அரசுக்கு சொந்தமான சீன நிறுவனமான சினோபார்ம் மற்றும் யு.எஸ். பயோடெக் நிறுவனமான மாடர்னாவிலிருந்தும் தொடர்ந்து தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி பாதுகாப்பனவை!

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அஸ்ட்ராஜெனெகா இந்த தடுப்பூசி உருவாக்கி வருகிறார்.

London:

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.44 கோடியை கடந்துள்ள நிலையில் 6 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அஸ்ட்ராஜெனெகாவின் கொரோனா தொற்று தடுப்பூசி நோயெதிப்பு சக்தியை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

AZD1222 என அழைக்கப்படும் இந்த தடுப்பூசி, அஸ்ட்ராஜெனெகா மற்றும் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. தி லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட சோதனை முடிவுகளின்படி இந்த தடுப்பூசியானது எந்தவொரு கடுமையான பக்க விளைவுகளையும் தூண்டவில்லை மற்றும் ஆன்டிபாடி மற்றும் டி-செல் நோயெதிர்ப்பு மறுமொழிகளை வெளிப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்த தடுப்பூசியானது நோயெதிர்ப்பு அமைப்பு வைரஸை நினைவில் வைத்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், இதனால் எங்கள் தடுப்பூசி நீண்ட காலத்திற்கு மக்களைப் பாதுகாக்கும்.” என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முன்னணி எழுத்தாளர் ஆண்ட்ரூ பொல்லார்ட் கூறியுள்ளார்.

“இருப்பினும், SARS-CoV-2 (COVID-19) நோய்த்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி திறம்பட பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கு முன்னர் எங்களுக்கு கூடுதல் ஆராய்ச்சி தேவை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் சினோவாக் பயோடெக், அரசுக்கு சொந்தமான சீன நிறுவனமான சினோபார்ம் மற்றும் யு.எஸ். பயோடெக் நிறுவனமான மாடர்னாவிலிருந்தும் தொடர்ந்து தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

தடுப்பூசி திறம்பட நிரூபிக்கப்பட்டு ஒழுங்குமுறை ஒப்புதல் பெற, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுடன் அஸ்ட்ராஜெனெகா ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்நிலையில் தொற்றுநோய்களின் போது தடுப்பூசியிலிருந்து லாபம் பெற முயற்சிக்க மாட்டோம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி அடிக்கடி சிறிய பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர், ஆனால் இவற்றில் சிலவற்றை பாராசிட்டமால் உட்கொள்வதன் மூலம் குறைக்க முடியும், தடுப்பூசியிலிருந்து கடுமையான பாதகமான நிகழ்வுகள் எதுவும் இல்லை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.