This Article is From Apr 26, 2020

உலக நாடுகள் சீனாவின் வர்த்தகத்தினை தவிர்த்தது நமக்குக் கிடைத்த வாய்ப்பு; நிதின் கட்கரி

2025 க்குள் 5 ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சி என்கிற நமது பிரதமர் நரேந்திர மோடி லட்சியத்தினை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாகவும் இது அமைந்திருக்கிறது.

உலகின் ஒவ்வொரு நாடும், இப்போது, சீனாவுடன் வர்த்தகம் செய்ய விரும்பவில்லை: நிதின் கட்கரி

New Delhi:

சர்வதேசிய அளவில் கொரோனா தொற்றால் 28 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் தற்போது, சீனாவுடன் வர்த்தகம் செய்ய உலக நாடுகள் விரும்பவில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். என்.டி.டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், உலக நாடுகள் சீனாவுடன் வர்த்தகம் செய்ய விரும்பாதது இந்தியாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. இது ஒரு ஆசீர்வாதம் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முன் ஏற்பாடு இல்லாமல் அமல்படுத்தப்பட்ட முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கையின் காரணமாக ஆயிரக்கணக்கான விளிம்பு நிலை புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். சிறு குறு தொழில்கள் முடங்கியுள்ளன. இந்த நிலையில் முழு முடக்க நடவடிக்கைக்கு பின்பு நாட்டின் பொருளாதாரத்தை சீராக்குவது மற்றும் சிறு குறு தொழில்களை ஊக்குவிக்கச் செய்வதற்கான கலந்துரையாடலுக்கு பிறகான பேட்டியில் கட்கரி மேற்குறிப்பிட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

தற்போது சீனா உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிமுறைகளை மீறியதாகவும், நியாயமான வர்த்தகத்தினை பின்பற்றவில்லை என்றும் விமர்சனங்கள் மேலெழுந்துள்ளன.

“சர்வதேச அளவில் நாடுகள் ஒவ்வொன்றும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் சீனா உலக அளவில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக இருந்தாலும், அந்நாட்டுடன் மற்ற நாடுகள் வர்த்தகம் செய்ய விரும்பவில்லை. இது எங்களுக்குக் கிடைத்த சிறந்த வாய்ப்பாகும்.” என்று கட்கரி தெரிவித்துள்ளார்.

மேலும், 2025 க்குள் 5 ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சி என்கிற நமது பிரதமர் நரேந்திர மோடி லட்சியத்தினை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாகவும் இது அமைந்திருக்கிறது. புதிய தொழில்நுட்பங்களை முதலீடுகளாக மாற்ற நாங்கள் கூட்டு செயலாளரை நியமிப்போம் இது பிரதமரின் லட்சியத்திற்கு நிச்சயம் உதவும் என்றும் கட்கரி கூறியுள்ளார்.

இந்தியாவும், சீனாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், அது இந்த இரு நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. இந்த நிலையில் 2020ல் ஆசிய நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் என்பது 1.2 என்ற அளவில்தான் இருக்கும் என சர்வதேச நாணய நிதியம்(IMF) கணித்துள்ளது. இது கடந்த நாற்பது ஆண்டுகளை விட குறைந்த அளவிலான  வளர்ச்சியாகும். மார்ச் மாதத்தில் ஏற்பட்ட தொழில்துறை உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனையில் 16 சதவிகித வீழ்ச்சியின் காரணமாக கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 6.8 சதவிகிதமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்துள்ளது.

கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் வூகான் நகரில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், அந்நாடு பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது. சீனா கொரொனா தொற்று பரவியதை சரியான நேரத்தில் தெரிவிக்கவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்தியாவின் நடப்பு ஆண்டின் வளர்ச்சி விகிதம் 1.9 என்கிற அளவில்தான் இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்திருக்கிறது. இந்த விகிதமானது அடுத்தடுத்த ஆண்டுகளில் சீனா, மற்றும் இந்தியாவில் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1990 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 26,496 பேர் தேசிய அளவில் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.