This Article is From Sep 03, 2020

தமிழகத்தில் ஒரே நாளில் 5,892 பேருக்கு கொரோனா! பரிசோதனை எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியது

சென்னையில் ஒரே நாளில் 968 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,892 பேருக்கு கொரோனா! பரிசோதனை எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியது

தமிழகத்தில் ஒரே நாளில் 5,892 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 45 ஆயிரத்து 851 ஆக உயர்ந்துள்ளது.


தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 4.45 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று  80,864 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,892 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் ஒட்டு மொத்த பாதிப்பு 4,45,851 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 6,110 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,86,173 ஆக அதிகரித்துள்ளது. இன்று 92 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமான உயிரிழப்பு பதிவாகியிருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 100க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 7,608 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 968 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,38,724 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,788 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலேயே பரிசோதனைகளின் எண்ணிக்கை முதன்முறையாக தமிழகத்தில் 50 லட்சத்தைத் தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

.