This Article is From Jan 06, 2020

Chennai Rains: சென்னையைக் குளிர்வித்து வரும் ‘ஜனவரி மழை’- வரும் நாட்களிலும் தொடருமா..?

Chennai rains: "கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான குறைவான மழை பொழிவை இப்போது பெய்துள்ள மழை நிவர்த்தி செய்துள்ளது"

Chennai Rains: சென்னையைக் குளிர்வித்து வரும் ‘ஜனவரி மழை’- வரும் நாட்களிலும் தொடருமா..?

Chennai rains: சென்னையைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, புழல் பகுதியில் 55 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Chennai rains: சென்னையில் வடகிழக்குப் பருவமழைக் காலம் முடிவடைந்த பின்னரும், 2020 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை நகரின் பெரும்பான்மையான இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இது வரும் நாட்களிலும் தொடருமா என்பது குறித்து பிரபல வானிலை வல்லுநர், தமிழ்நாடு வெதர்மேன், பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். 

வெதர்மேன், சென்னையில் பெய்து வரும் ‘சர்ப்ரைஸ் மழை' குறித்து, “1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில், ஜனவரி மாதம் பெய்யும் அதிகபட்ச மழை இதுவேயாகும். நாளைக்கும் சென்னை நகரில் மழை பெய்யும். ஜனவரி 9 ஆம் தேதியன்று நமது வடகிழக்குப் பருவமழைக் காலம் முற்றிலும் முடிவுக்கு வரும். 

kqbnuli

கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான குறைவான மழை பொழிவை இப்போது பெய்துள்ள மழை நிவர்த்தி செய்துள்ளது. குறிப்பாக தென் சென்னையில் நிலத்தடி நீர் நல்ல அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு எந்த வித பெரு வெள்ளமோ, புயலோ இல்லாமலேயே சென்னையில் நீர் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழையின் கடைசி 2 நாட்களை அனுபவிப்போம். அதன் பிறகு மழைக்கு பிரேக்தான்,” என்று தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். 

சென்னையைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, புழல் பகுதியில் 55 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து மதுரவாயல் மற்றும் நுங்கம்பாக்கத்தில் முறையே 23 மற்றும் 22 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என்று கூறுகிறார் வெதர்மேன். 

.