This Article is From Aug 08, 2020

சென்னையில் கொரோனா: 1000க்கு கீழ் குறைந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை; ஆகஸ்ட் 8ம் தேதி அப்டேட்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 93,231 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

சென்னையில் கொரோனா: 1000க்கு கீழ் குறைந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை; ஆகஸ்ட் 8ம் தேதி அப்டேட்!

சென்னையிலேயே அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 1,419 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் நேற்று, பாதிப்பு எண்ணிக்கை 1000க்கு கீழ் வந்தது
  • சென்னையில் பாதிப்பைவிட டிஸ்சார்ஜ் விகிதம் அதிகமாக உள்ளது
  • இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 87% பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்

தமிழகத்தில் நேற்று 5,880 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 984 பேர். ஒட்டுமொத்த அளவில் 2,85,024 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 6,488 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 2,27,575 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 52,759 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 119 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 4,690 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (08.08.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 410

மணலி - 78

மாதவரம் - 534

தண்டையார்பேட்டை - 606

ராயபுரம் - 806

திரு.வி.க நகர் - 826

அம்பத்தூர் - 1,419

அண்ணா நகர் - 1,263

தேனாம்பேட்டை - 787

கோடம்பாக்கம் - 1,347

வளசரவாக்கம் - 827

ஆலந்தூர் - 544

 அடையாறு - 904

பெருங்குடி - 538

சோழிங்கநல்லூர் - 450

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 267

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 93,231 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 87 சதவீத மீட்பு விகிம் ஆகும். 2,272 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 11,606 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 1,103 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 1,419 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்திலும் மற்றும் அண்ணா நகர் மண்டலத்திலும் முறையே 1,347 மற்றும் 1,263 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 78 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

.