This Article is From Jan 29, 2019

திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி சுவரில் துளைபோட்டு கொள்ளை!

திங்களன்று காலை வங்கி அதிகாரிகள் தங்கள் பணிக்காக வங்கிக்குள் சென்றபோதே கொள்ளை சம்பவம் தெரியவந்தது.

திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி சுவரில் துளைபோட்டு கொள்ளை!

பஞ்சாப் நேஷனல் வங்கியால், கொள்ளையடிக்கப்பட்ட மதிப்பிட்டை அறிய முடியவில்லை.

Chennai:


திருச்சி சமயபுரம் சாலையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுவரில் துளையிட்டு லாக்கர்களில் இருந்த நகைகள் மற்றும் லட்சக்கணக்கான பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

திங்களன்று காலை வங்கி அதிகாரிகள் தங்கள் பணிக்காக வங்கிக்குள் சென்றபோதே கொள்ளை சம்பவம் தெரியவந்தது.

வங்கி சுவரை துளையிட்டு உள்ளே புகுந்துள்ள கொள்ளையர்கள் காஸ் மற்றும் வெல்டிங் ராடுகள், காஸ் சிலிண்டரை பயன்படுத்தி அங்குள்ள சுவரையும் துளையிட்டுள்ளனர். பின்னர் வாடிக்கையாளர்களின் லாக்கர்களை வெல்டிங் வைத்து உடைத்து, அதிலிருந்து பவுன் நகைகள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொள்ளையர்கள் துளையிட்ட சுவர் இதுவரை மூடப்படாததால் வங்கி வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே வங்கியை முற்றுகையிட்டு மற்ற லாக்கர்களை திறந்து காட்டும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். எங்களது பொருட்கள் பத்திரமாக உள்ளதா என்பது குறித்து நாங்கள் உள்ளே சென்று பார்க்க அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

.