This Article is From Feb 01, 2020

பட்ஜெட் தொடங்குவதற்கு முன்பு அருண் ஜெட்லிக்கு மரியாதை செலுத்திய நிதியமைச்சர்!

பட்ஜெட்டை தொடங்கும்போது ​​நிதியமைச்சர் "அவருக்கு மரியாதை செலுத்த விரும்புகிறேன்" என்று கூறினார். பின்னர் அவரை மேற்கோள் காட்டி, "இது மத்திய மற்றும் மாநிலங்கள் ஒன்றிணைந்து செழிப்புடன் செயல்படும் இந்தியாவாக இருக்கும்" என்றார்.

2020ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சித்ரமன் இன்று சமர்ப்பித்தார்.

New Delhi:

2020-2021 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தொடங்குவதற்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறைந்த அமைச்சர் அருண் ஜெட்லியைக் குறிப்பிட்டு, சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்துவதில் அவர் செய்த பணிகள் பெரும் பங்களிப்பை அளித்தது என்றார். ஜெட்லி கடந்த 2019 ஆகஸ்ட் 24ம் தேதி உயிரிழந்தார். 

பட்ஜெட்டை தொடங்கும்போது ​​நிதியமைச்சர் "அவருக்கு மரியாதை செலுத்த விரும்புகிறேன்" என்று கூறினார். பின்னர் அவரை மேற்கோள் காட்டி, "இது மத்திய மற்றும் மாநிலங்கள் ஒன்றிணைந்து செழிப்புடன் செயல்படும் இந்தியாவாக இருக்கும்" என்றார்.

சரக்கு மற்றும் சேவை வரி அல்லது ஜிஎஸ்டி, வெவ்வேறு மாநிலங்களில் உள்ள வரிகளை ஒரே மாதிரியான நாடு தழுவிய வரியுடன் மாற்றியமைத்தது, அதன் செயல்பாடுகள் மற்றும் குறைபாடுள்ள செயல்களுக்காக விமர்சிக்கப்பட்டது; நாட்டில் தற்போதைய பொருளாதார மந்தநிலையை உருவாக்குவதில் சில வல்லுநர்களும் இதற்கு ஒரு காரணமாக இருந்தனர்.

ஜிஎஸ்டி பற்றி திருமதி சீதாராமன் கூறினார்:

*ஏப்ரல் 1, 2020 முதல் எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருவாய் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது
*ஜிஎஸ்டி "சில சவால்களால் குறிக்கப்பட்டது - இயற்கையானது மாற்றம் அச்சுறுத்தலாக இருந்தது."
*இது ஒரு சீர்திருத்தமாக முதிர்ச்சியடைந்துள்ளது
*இது 60 லட்சம் புதிய வரி செலுத்துவோரை இணைத்துள்ளது
*மொத்தம் 40 கோடி வருமானம் தாக்கல் செய்யப்பட்டது, 800 கோடி விலைப்பட்டியல் பதிவேற்றப்பட்டது

.