This Article is From Nov 30, 2018

ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் காலமானார் - தள்ளிப்போகிறது தேர்தல்

வேட்பாளர் காலமானதால் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199-ல் மட்டும் தேர்தல் நடத்தப்படும்

ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் காலமானார் - தள்ளிப்போகிறது தேர்தல்

லக்ஸ்மன் சிங் ஆல்வார் மாவட்டம் ராம்கர் தொகுதியில் போட்டியிட இருந்தார்.

Jaipur:

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் லக்ஸ்மன் சிங் காலமானார். இதனால் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199-ல் மட்டும் தேர்தல் நடைபெறவுள்ளது.

லக்ஸ்மன் சிங்குக்கு வயது 62. அவர் ஆல்வார் மாவட்டம் ராம்கர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தது.

இதுகுறித்து, தேர்தல் அதிகாரி பங்கஜ் குமார் கூறுகையில், பகுஜன் சமாஜ் வேட்பாளர் லக்ஸ்மன் சிங் வியாழன் அன்று காலை காலமானார். இதனால் அந்த தொகுதியில் தேர்தல் நடைபெறுவது ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்று கூறியுள்ளார்.

ராம்கர் சட்டமன்ற தொகுதியில் 21 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ராஜஸ்தானில் டிசம்பர் 7-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முடிவுகள் 12-ம் தேதி அறிவிக்கப்படுகின்றன.
 

.