This Article is From Sep 27, 2018

உடல் மீது ஏறிச் சென்ற கார் - உயிர் பிழைத்தானா சிறுவன்? வைரலாகும் வீடியோ

மும்பையில் சாலையில் அமர்ந்திருந்த சிறுவன் மீது கார் ஏறிச் சென்ற வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது

சிறுவன் மீது கார் ஏறிச் செல்லும் காட்சி

ஹைலைட்ஸ்

  • மும்பை எடுக்கப்பட்ட வீடியோ காட்சி வைரலாகி வருகிறது
  • சமூக வலை தளங்களில் பல்வேறு தரப்பினர் விமர்சனம்
  • சம்பந்தப்பட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்
New Delhi:

மும்பையில் சாலையில் அமர்ந்திருந்த சிறுவன் மீது கார் ஒன்று ஏறிச் சென்றுள்ளது. இருப்பினும் அவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளான். இந்த காட்சியை பெங்களூரு போலீசார் ட்வீட் செய்துள்ளனர்.

வீடியோவில், சிறுவர்கள் சிலர் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுவன் தரையில் அமர்ந்து தனது ஷூ கையிறுகளை கட்டிக் கொண்டிருக்கிறான். அப்போது அவனுக்கு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதில் பெண் ஒருவர் ஏறி உள்ளே செல்கிறார். சிறுவன் முன்னே அமர்ந்திருப்பதை அவர் பார்க்கவில்லை. இதன்பின்னர் காரை வேகமாக எடுத்துச் செல்கிறார்.

அப்போது காருடன் சேர்ந்து அந்த சிறுவனும் முன்னோக்கி செல்கிறான். ஒரு கட்டத்தில் தரையோடு தரையாக சிறுவன் கவிழ்ந்து விடுகிறான். இரு கார் டயர்களுக்கு இடையே அவன் சென்றதால், அவன் உடலுக்கு மேலே கார் சென்றது. கார் சென்ற பின்னர் சிறுவன் எழுந்து கேஷுவலாக நடந்து சென்றான்.

இந்த சம்பவம் கடந்த 24-ம்தேதி இரவு 7 மணிக்கு பதிவாகியுள்ளது. இடம் வடமேற்கு மும்பையில் உள்ள சத்குரு காம்ப்ளக்ஸில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒருவழியாக இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

.