This Article is From Aug 13, 2019

அபிராமியுடன் சண்டை, கண்ணீரில் முகேன், கொந்தழிக்கும் சாண்டி!

Bigg Boss Tamil 3: சிறப்பு விருந்தினராக வனிதாவை உள்ளே அனுப்பினார். அவர் உள்ளே வந்த போதே 'இருக்கு... சம்பவம் இருக்கு' என்றார் சாண்டி. அந்த சம்பவம் இன்று பிக் பாஸில் நடந்துவிட்டது.

அபிராமியுடன் சண்டை, கண்ணீரில் முகேன், கொந்தழிக்கும் சாண்டி!

Bigg Boss 3: பயங்கரமாக வெடித்த அபிராமி-முகேன் பிரச்னை, கோவத்தில் சாண்டி

Bigg Boss Tamil 3: நேற்று பிக் பாஸ் (Bigg Boss) இந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் டாஸ்க்கை அறிவித்தார். பிக் பாஸ் வீட்டை ஹோட்டலாக மாற்றிய பிக் பாஸ் சேரனை மேனேஜராகவும், மதுமிதாவை  செஃபாகவும் அறிவித்தார். ரூம் சர்வீஸ் தர்ஷன், அபிராமி, கஸ்தூரி, ஹவுஸ் கீப்பிங் கவின், சாண்டி, ஸ்பா செரின், என்டர்டெய்னர்ஸ் லாஸ்லியா, முகேன் என அனைவருக்கும் அவர்களுடைய பாத்திரத்தை கூறினார். பிக் பாஸ் செய்ததிலேயே இதுதான் சிறப்பான சம்பவம். சிறப்பு விருந்தினராக வனிதாவை உள்ளே அனுப்பினார். அவர் உள்ளே வந்த போதே 'இருக்கு... சம்பவம் இருக்கு' என்றார் சாண்டி. அந்த சம்பவம் இன்று பிக் பாஸில் நடந்துவிட்டது.

நேற்று அனைவரிடமும் பேசியிருந்தாலும், வனிதா (Vanitha) அபிராமியிடம் (Abhirami) மட்டும் சற்று அதிகமாகவே பேசினார். இன்றைய பிக் பாஸின் முதல் ப்ரோமோவும் அதைத்தான் காட்டியது. அபிராமியிடம் முகேன் பற்றி பேசிக்கொண்டிருந்தார் வனிதா. 'நீ ஜீரோ ஆகிட்ட, அவன் ஹீரோ ஆகிட்டான்', 'நீ என்னடா என்ன லவ் பண்றது எனக்கு தேவையே இல்லைனு தூக்கிப்போட்டுட்டு போ', 'துர்கா யாருனு சொன்னானா?' என்ற வனிதாவின் வார்த்தைகள், நிச்சயம் எங்கேயோ பிரச்னையாக வெடிக்கப்போகிறது என்று மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அந்த பிரச்னை எங்கு வெடிக்கப்போகிறது என்று பிக் பாஸ் (Bigg boss) ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருக்க, இங்குதான் வெடித்துள்ளது என்று இரண்டாவது ப்ரோமோவில் காட்டிவிட்டார் பிக் பாஸ். இத்தனை நாள், இவர்களிடையே பிரச்னை வந்துள்ளது. ஆனால், அனைத்து முறையும் அவர்களுக்குள்ளேயே பேசித்தீர்த்திருக்கிறார்கள். ஆனால், முதன்முறையாக, இவர்களுக்கிடையேயான பிரச்னை வீட்டில் அனைவரின் முன்பு விவாத்திற்கு வந்தது.

முகேன் (Mugen) பற்றி நாம் அனைவரும் அறிந்ததே, எளிதில் கோவத்தின் உச்சியை அடைந்துவிடுவார். இன்றும் அதுதான் நடந்தது. அபிராமியுடன் விவாதித்துக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில், இருவருக்கிடையே அது பெரிய சண்டையாக முடிந்துவிட்டது. அபிராமி தான் அமர்ந்திருந்த சேரை தள்ளிவிட்டு எந்திரிக்க, முகேன் தான் அமர்ந்திருந்த சேரை கைகளில் தூக்கிக்கொண்டார். பின் அனைவரும் இருவரையும் பிரித்து அழைத்து சென்றுவிட்டனர்.

பின் 'நான் எதுவுமே சொல்லக்கூடாதா?' என அழுக ஆரம்பித்துவிட்டார் முகேன். 'அவ உன்னோட வீக்னஸ யூஸ் பண்ற டா' என்று தர்ஷன் சொல்ல, 'முட்டாள்' என்று சேரன் திட்டிக்கொண்டிருந்தார்.

இந்தனை நாள், சாண்டி எந்த பிரச்னையிலும் உள்ளே நுழையவில்லை என்று குற்றம் சாற்றிக்கொண்டிருந்தார்கள் பிக் பாஸ் ரசிகர்கள். அந்த குற்றத்தை உடத்தெரிந்தார் சாண்டி. முகேனிடம் 'டேய்!' என்று கத்திய சாண்டி, வனிதாவை பார்த்து 'நேத்து அவ கிட்ட என்ன சொன்ன?' என்று கேட்டார். வனிதா 'ஒரு நிமிஷம்!' என்று பதில் சொல்ல, 'என்ன ஒரு நிமிஷம்? புரியலையே எனக்கு, நோண்டி நோண்டி விட்டுட்டு!' என்று வனிதாவை எதிர்த்து பேசினார். (மாஸ் சாண்டி நீங்க!)

ஆக மொத்தம் நீங்க நெனச்சத நடத்தீட்டீங்களே பிக் பாஸ், அமைதிய இருந்த வீட்டுல, அம்மி கல்ல தூக்கி போட்டுட்டீங்களே!

.