This Article is From Sep 02, 2019

Bigg Boss: மீண்டும் ஓபன் நாமினேஷன், கவின், லாஸ்லியாவை சொல்லி ஷாக் கொடுத்த சாண்டி!

Bigg Boss Tamil 3: இந்த வாரம், பிக் பாஸ் வீட்டில் ஓபன் நாமினேசன்.

Bigg Boss: மீண்டும் ஓபன் நாமினேஷன், கவின், லாஸ்லியாவை சொல்லி ஷாக் கொடுத்த சாண்டி!

Bigg Boss 3 Tamil, Kavin, Cheran: சேரனை நாமினேட் செய்த கவின்

Bigg Boss 3 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்துவிட்டது. நேற்றைய பிக் பாஸில் இன்று எளிமினேஷன் இல்லை என்று போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் கமல் ஹாசன். அவர்களுக்குதான் சர்ப்ரைஸ் நமக்கு அந்த செய்தியை சென்ற வாரமே சொல்லிவிட்டார். கடந்த வாரம், நாமினேஷனில் இருந்த கவின், செரின் மற்றும் வனிதா ஆகியோர் 'நான்தான் போவேன், நான்தான் போவேன்' என போட்டி போட்டுக்கொண்டனர். ஆனால், யாரும் போகப்போவதில்லை என எளிமினேஷன் கார்டை தூக்கி எரிந்து அறிவித்தார். கடந்த வாரம் முழுவதும், அமைதியான டாஸ்க், அமைதியான சூழல் என்று இருந்த பிக் பாஸ் வீட்டை ஒரே ஒரு செயலில் தலைகீழாக மாற்றிவிட்டார் பிக் பாஸ். இந்த வாரம் பிக் பாஸ் நாமினேசனை ஓபன் நாமினேசனாக அறிவித்தார் பிக் பாஸ்.

இந்த வார நாமினேசனில், சாண்டி, கவின் மற்றும் லாஸ்லியாவை நாமினேட் செய்துவிட்டு "பர்ஸ்ட் அவன் எப்படி இருந்தான்னு எனக்கு தெரியும். அவ்வளவு ஜாலியா உள்ள வந்தோம். எனக்கு அவன் பழைய மாதிரி வேணும்" என்று மிகவும் மனவருத்தத்துடன் சொல்லிவிட்டு 'டேய் ஒன்னு இரு. இல்லனா வெளிய போடா' என்று கவினை பார்த்து சொல்லிவிட்டு அழுக ஆரம்பித்தார். சாண்டி அழுதைப் பார்த்து 'இது ஒரு கேம், கேம்மாதான் பாக்கனும். அழுகறதுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல' என்று வனிதா சொல்ல 'நீ நீயா இரு, நான் நானா இருக்கேன்' என்று பதிலளித்தார்.

கவின் 'நீங்கள் பல வெற்றிகளை கண்டிருக்கிறீர்கள்' எனக் கூறி சேரனை நாமினேட் செய்ய அப்போதும் குறிக்கிட்ட வனிதா, இந்த காரணம் திருப்தியாக இல்லை என்று கூற "எனக்கு அவரை பிடிக்காது. அதனால அவரை நாமினேட் பன்றேன். ஓகேவா?" என்று பதிலளித்தார்.

இன்னிலையில், சம்பவம் இருக்கு, வனிதாவிற்கும் கவினிற்கும் இடையே ஒரு சம்பவம் இருக்கு என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்க்கு, ஆமாம் இருக்கு என்று உறுதி செய்தது இன்றைய நாளின் கடைசி ப்ரோமோ. "என்ன ஃப்ரண்ட்ஷிப். உன்ன மக்கள் காப்பாத்திருக்காங்கல. உனக்கு பதில் சாக்க்ஷிய காப்பாத்திருந்தா அவ பைனல்ஸ்க்கு போயிருப்பா. உன்னால அவ வெளிய போயிட்டா. அதுக்கு என்ன பதில் சொல்ல போற'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கவின் "நான்தான் நேத்தே சொன்னனே, இப்போயும் கூட கதவ திறக்க சொல்லுங்க. வெளிய போய்றேன்" என்றார்.

இப்படியாக விவாதங் கள் நடந்துகொண்டிருக்க, கவினை பார்த்து ''நீ சாக்க்ஷியை உள்ளே கூட்டிட்டு வந்து விட்டுட்டு வெளிய போ'' என்றார் வனிதா. அதற்கு கோபமடைந்த கவின் "நீங்க திரும்ப உள்ள வந்துட்டீங்க அப்படிங்கிறதுக்காக எல்லா விதத்துலையும் அவ்வளவு கரக்ட்னு கிடையாது கா" என்று பதிலளித்தார். "யார் கரக்ட், யார் தப்புனு நான் சொல்ல வரல" என வனிதா கூற "அதைத்தான் நானும் சொல்றேன். யாருமே யார் கரக்ட்னு முடிவு பண்ண முடியாது. அதுக்குதான் மக்கள் இருக்காங்க" என்றார் கவின்.  "இது சிம்பதிக்கான ஸ்டேஜ் கிடையாது" என வனிதா சொல்ல, இப்படியாக இவர்கள் இரண்டு பேருக்கும் இடையேன விவாதம் தீவிரமாக நடந்தது.

இடையில் பார்வையாளர்களின் நிலை 'ரெண்டு பேரும் என்ன தான்டா சொல்ல வர்றீங்க' என்பது போலதான் இருந்திருக்கும்.

.