This Article is From Oct 18, 2018

விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது!

செவ்வாயன்று பெங்களூரைச் சேர்ந்த ராஜூ கங்கப்பா, 20 வயது விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார்

விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது!

இதுகுறித்து அப்பெண் மேலதிகாரிகளிடம் தெரிவித்ததும், ராஜூ கங்கப்பா விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

Mumbai:

28 வயதுடைய பயணி ஒருவர் மும்பை விமானநிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு முன் விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரைச் சேர்ந்த ராஜூ கங்கப்பா, 20 வயது விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார். இச்செயலை அப்பெண் கண்டித்துள்ளார். அதற்கு ராஜூ தகாத வார்த்தைகளால் விமான பணிபெண்ணை திட்டியுள்ளார். என்று அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து அப்பெண் மேலதிகாரிகளிடம் தெரிவித்ததும், ராஜூ கங்கப்பா விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன்பின், ராஜூ கங்கப்பா சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். பிறகு விமான நிலைய காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். ராஜூ கங்கப்பா மீது இந்திய தண்டனை சட்டம் 354ல் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அவரை நேற்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தினர். மேலும் ஒருநாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

.