This Article is From Jul 24, 2019

“பிறக்கும் போது நாம் ஆடையுடன் பிறக்கவில்லை” – திரைப்படவிழாவில் அமலா பால்!

திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துகளை கொண்டு போய் சேர்க்க முடியும்

“பிறக்கும் போது நாம் ஆடையுடன் பிறக்கவில்லை” – திரைப்படவிழாவில் அமலா பால்!

ஹைலைட்ஸ்

  • ஆடை படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது
  • எதிர்பார்த்த விமர்சனத்தை இப்படம் பெற்றுள்ளது
  • இப்படத்தை ரத்னகுமார் இயக்கி உள்ளார்

பல்வேறு பிரச்னைகளை கடந்து அமலா பால் நடித்துள்ள ஆடை திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இயக்குநர் ரத்னகுமார் இயக்கி இருக்கும் இப்படம் பெண்களின் ஆடை சுதந்திரம் குறித்து பேசியிருக்கிறது. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், மைலாப்பூர் ஐநாக்ஸ் திரையரங்கில் நடைபெற்ற திரைப்பட விழாவில் இயக்குனர் பாரதி ராஜாவும், அமலாபாலும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

அப்போது பேசிய நடிகை அமலா பால், திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துகளை கொண்டு போய் சேர்க்க முடியும். சினிமா வெகுஜன மக்களின் பேசும் கருவியாக இருந்து வருகிறது. நாம் பிறக்கும் போது ஆடையுடன் பிறக்கவில்லை அதே போல் அதே போல், யாரும் சாதி மதங்களுடன் பிறக்கவில்லை எனவும் அமலாபால் கூறினார்.

.