This Article is From Oct 26, 2018

சீனியரை மிரட்ட பள்ளிக்கு துப்பாக்கி கொண்டு வந்த மாணவன்!

பள்ளி சுற்றுலாவின் போது இருமாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாதத்தால் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஒரு மாணவர் காயமடைந்தார்.

சீனியரை மிரட்ட பள்ளிக்கு துப்பாக்கி கொண்டு வந்த மாணவன்!

பள்ளி காவலர்கள் தலையிட்டு இருவரையும் போலீஸிடம் ஒப்படைந்தனர்

New Delhi:

மேற்கு டெல்லியில் உள்ள விகாஸ்பூரில், தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர் தன்னுடன் சீனியர் மாணவருடன் ஏற்பட்ட சண்டையால், அவரை மிரட்ட பள்ளிக்கு துப்பாக்கியை கொண்டு வந்துள்ளார். உதவிக்கு உடன் இரண்டு நபர்களையும் அழைத்து வந்துள்ளார்.

பள்ளி சுற்றுலாவின் போது இருமாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாதத்தால் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஒரு மாணவர் காயமடைந்தார். மறுநாள் பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த அந்த மாணவன் துப்பாக்கியை காட்டி மிரட்டி சண்டையில் ஈடுபட்டுள்ளார் என்று போலீசார் கூறினர்.

பின் பள்ளி காவலர்கள் தலையிட்டு இருவரையும் போலீஸில் ஒப்படைத்துள்ளதாக போலீஸ் அதிகாரி கூறினர்.

.