This Article is From Sep 25, 2018

மண்ணெண்ணெய் குடித்த 18 மாத குழந்தை பலி; கோவையில் சோகம்!

கோயம்புத்தூரின் பொள்ளாச்சி மாவட்டத்தில், 18 மாத குழந்தை ஒன்று, பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை தவறுதலாக குடித்துள்ளது

மண்ணெண்ணெய் குடித்த 18 மாத குழந்தை பலி; கோவையில் சோகம்!

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துள்ளது. (கோப்புப் படம்)

Coimbatore:

கோயம்புத்தூரின் பொள்ளாச்சி மாவட்டத்தில், 18 மாத குழந்தை ஒன்று, பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை தவறுதலாக குடித்துள்ளது. இதனால் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது என்று போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. 

அனன்யா என்ற அந்த குழந்தை கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை தவறுதலாக எடுத்து குடித்துள்ளது. இதையடுத்து வயிறு வலி தாங்க முடியாமல் அனன்யா கதறி அழுதுள்ளார்.

அனன்யாவின் அழு குரல் கேட்டவுடன், விரைந்து வந்த அவரது பெற்றோர்கள் அவரை அருகிலிருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனையில் அனன்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 
 

.