This Article is From Sep 13, 2018

மனைவி உள்பட 5 பேரை சுட்டுக் கொன்றவர் தற்கொலை – அமெரிக்காவில் அதிர்ச்சி

கொலைகளுக்கான காரணம் என்னவென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

மனைவி உள்பட 5 பேரை சுட்டுக் கொன்றவர் தற்கொலை – அமெரிக்காவில் அதிர்ச்சி

தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக போலீசாரிடம் கொலைகாரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான்

ஹைலைட்ஸ்

  • கலிபோர்னியாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது
  • வீட்டில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்
  • ஒரு பெண்ணிடம் காரைப் பறித்து கொலைகாரன் சென்றுள்ளான்

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 5 பேரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்காவின் கலிபோர்னியா நகர போலுசார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் பேக்கர்ஸ்ஃபீல் நகரம் உள்ளது. இங்கு சுமார் 4 லட்சம்பேர் வசித்து வருகின்றனர்.

இந்த நகரில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கார் நிறுவனத்திற்கு சென்று துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் அவரது மனைவியும், இன்னொரு நபரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் இன்னொருவரை துரத்திச் சென்ற கொலை காரன் ஒரு விளையாட்டு பொருட்களை விற்பனை செய்யும் கடை முன்பாக அவரை சுட்டுக் கொன்றான்.

கொலைகாரணை பிடிக்க முயன்ற போலீசாருக்கும் அவனுக்கும் இடையே சிறிது நேரம் மோதல் ஏற்பட்டது. அப்போது, அங்கு வந்த காரை மறித்து அதில் இருந்த பெண்ணை மிரட்டி கொலைகாரன் காரில் சென்றான். காருக்குள் இருந்த பெண்ணையும் அவரது குழந்தையையும் கொலை காரன் ஒன்றும் செய்யவில்லை. வீட்டிற்கு சென்ற கொலைகாரன் அங்கு 2 பேரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டான்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் 10 முதல் 15 நிமிடங்களுக்குள் நடந்து விட்டன. ஏன் வெவ்வேறு இடங்களுக்கு சென்று இத்தனை பேரை அவன் கொலை செய்துள்ளான் என்பதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் துப்பாக்கி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. நேரில் பார்த்த சுமார் 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

.