This Article is From Aug 26, 2020

பஞ்சாபில் சட்டசபை கூடுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு 23 எம்எல்ஏக்களுக்கு கொரோனா உறுதியானது!

லட்சக்கணக்கான மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தேர்வுகளை ஒத்திவைப்பதற்காக உச்சநீதிமன்றம் செல்வதற்கு நாம் அனைவரும் ஒன்று கூடுவோம்" என்று அவர் கூறினார்.

பஞ்சாபில் சட்டசபை கூடுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு 23 எம்எல்ஏக்களுக்கு கொரோனா உறுதியானது!
New Delhi:

பஞ்சாபில் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில், 23 எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். 

இது சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் நிலை என்றால், தரையில் நிலைமை எவ்வளவு கடுமையானது என்பதை ஒருவரால் நினைத்து செய்து பார்க்க முடியும். உடல் பரிசோதனைகளை நடத்துவதற்கு இந்த நேரம் உகந்ததல்ல என்று அவர் கூறினார், பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய தேர்வுகளை அனுமதிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து எழுந்துள்ள கடுமையான விவாதத்தை குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறினார். 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று முதல்வர்களின் காணொளி காட்சி கூட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) உள்ளிட்டவற்றை ஒத்திவைக்கக் கோரி மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

இந்த கூட்டத்திற்குப் பிறகு, அமரீந்தர் சிங் கூறும்போது, பஞ்சாப் அட்வகேட் ஜெனரல் அதுல் நந்தாவிடம் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் உள்ள தனது சகாக்களுடன் ஒருங்கிணைந்து உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

லட்சக்கணக்கான மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தேர்வுகளை ஒத்திவைப்பதற்காக உச்சநீதிமன்றம் செல்வதற்கு நாம் அனைவரும் ஒன்று கூடுவோம்" என்று அவர் கூறினார். மேலும்,  உலகம் முழுவதும், தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட பிற பட்டப்படிப்புகளில் சேருவதற்கான பிற தொழில்முறை தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படலாம் என்றும், மாணவர்களை ஆபத்தில் ஆழ்த்த வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் பரிந்துரைத்தார்.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான இறுதி கால தேர்வுகள் குறித்தும், பல்கலைக்கழக மானிய ஆணையம் பஞ்சாப் அரசாங்கத்தின் கவலைகளை அங்கீகரிக்கவில்லை என்று அமரீந்தர் கூறினார்.

.