This Article is From Dec 22, 2018

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் - ராணுவத்தினர் 2 பேர் உயிரிழப்பு

குப்வாரா மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் - ராணுவத்தினர் 2 பேர் உயிரிழப்பு

வீர மரணம் அடைந்த 2 பேரும் ஜூனியர் அதிகாரிகள்

Srinagar:

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இந்திய ராணுவம் தரப்பில் ஜூனியர் அதிகாரிகள் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

குப்வாரா மாவட்ட எல்லைப் பகுதியில் இந்த  சம்பவம் நடந்திருக்கிறது. காலை 11.55-க்கு பாகிஸ்தான்  ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்த தொடங்கினர். இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்தியாவுடன் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் எல்லையோர கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 

.