This Article is From Aug 17, 2020

காங்கிரஸ் தலைமையை மாற்றக்கோரி கட்சித் தலைவர் 100 பேர் சோனியாவுக்கு கடிதம்!; சஞ்சய் ஜா

“சோனியா காந்தி தலைவராக இருக்கிறார், சரியான நடைமுறை நடைமுறைப்படுத்தப்படும் காலம் வரை அவர் தொடருவார்.” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கூறினார்.

காங்கிரஸ் தலைமையை மாற்றக்கோரி கட்சித் தலைவர் 100 பேர் சோனியாவுக்கு கடிதம்!; சஞ்சய் ஜா

கடந்த மாதம் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து சஞ்சய் ஜா நீக்கப்பட்டார்.

New Delhi:

சமீப காலங்களில் காங்கிரஸ் கட்சியினுள் பெரும் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் துனைமுதல்வரான சச்சின் பைலட் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிரான போர்க்கொடியை உயர்த்தியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து கட்சியின் தலைமை நிர்வாகிகளின் பேச்சு வார்த்தையையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.

தற்போது, எம்.பி.க்கள் உட்பட சுமார் 100 காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்திக்கு அரசியல் தலைமை மற்றும் கட்சியில் வெளிப்படையான தேர்தல்களில் மாற்றம் கோரி கடிதம் எழுதியுள்ளதாக இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் சஞ்சய் ஜா இன்று ட்வீட் செய்திருப்பது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சச்சின் பைலட்டின் கிளர்ச்சியின் பின்னர் கட்சியை பகிரங்கமாக விமர்சித்ததை அடுத்து சஞ்சய் ஜா கடந்த மாதம் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், “கட்சிக்குள்ளான விவகாரங்களில் மன உளைச்சலுக்குள்ளான சுமார் 100 காங்கிரஸ் தலைவர்கள் (எம்.பி.க்கள் உட்பட), காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளதாக” சஞ்சய் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அரசியல் தலைமை மற்றும் சி.டபிள்யூ.சியில் வெளிப்படையான தேர்தல்களைக் கோரி இக்கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு தனது மகன் ராகுல் காந்தி பதவியில் இருந்து விலகிய பின்னர், சோனியா காந்தி இடைக்கால காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார்.

அவரது ஒரு வருட கால அவகாசம் ஆகஸ்ட் 10 ஆம் தேதியுடன் முடிவடையவிருந்தது, ஆனால் ஒரு கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு "மிக தொலைதூர எதிர்காலத்தில்" ஒரு "சரியான நடைமுறை" செயல்படுத்தப்படும் வரை அவர் தொடருவார் என்று கட்சி கூறியது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, ஆன்லைன் ஊடக சந்திப்பின் போது, ​​சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக இருந்த காலம் ஆகஸ்ட் 10 ஆம் தேதியுடன் அவர் பதவியேற்ற ஒரு வருடம் கழித்து முடிவடைகிறது என்பது உண்மைதான். ஆனால் அந்த இடம் தானாகவே காலியாகிவிடும் என்று அர்த்தமல்ல. என்று கூறியுள்ளார்.மேலும், “சோனியா காந்தி தலைவராக இருக்கிறார், சரியான நடைமுறை நடைமுறைப்படுத்தப்படும் காலம் வரை அவர் தொடருவார்.” என்றும்  அபிஷேக் மனு சிங்வி கூறினார்.

சமீபத்திய வாரங்களில், பல காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல்களின் தேவை குறித்து குரல் கொடுத்து வருகின்றனர், இது வழக்கமாக 135 ஆண்டுகால வரலாற்றில் நேரு-காந்தி குடும்ப உறுப்பினர்களால் பெரும்பாலும் வழிநடத்தப்பட்ட ஒரு கட்சிக்கு வெறும் சம்பிரதாயமாக இருந்து வருகிறது.

காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் சமீபத்தில் பி.டி.ஐ-க்கு அளித்த பேட்டியில், ராகுல் காந்திக்கு "கட்சியை மீண்டும் வழிநடத்துவதற்கான திறமை, திறன்" இருப்பதாக அவர் நிச்சயமாக நம்புவதாகவும், ஆனால் அவர் அவ்வாறு செய்ய விரும்பவில்லை என்றால், கட்சி ஒருவரை தேர்ந்தெடுக்க "நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

.