This Article is From Dec 30, 2018

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் தானம் செய்த இளைஞர் உயிரிழப்பு..!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு கடந்த 3-ம்தேதியன்று எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் ரத்தம் செலுத்தப்பட்டிருக்கிறது

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் தானம் செய்த இளைஞர் உயிரிழப்பு..!

சில நாட்களுக்கு முன்னர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் செலுத்தப்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரத்தம் தானம் செய்த இளைஞர் இன்று காலை இறந்துள்ளார்.

கர்ப்பிணிப் பெண்ணுக்கு கடந்த 3-ம்தேதியன்று எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் ரத்தம் செலுத்தப்பட்டிருக்கிறது. அப்போது தனக்கு செலுத்தப்பட்டது எச்.ஐ.வி. பாதிப்பு ரத்தம்தான் என அந்தப் பெண்ணுக்கு தெரியாது. இளைஞருக்கும், தனக்கு எச்.ஐ.வி இருந்தது குறித்து தெரிந்திருக்கவில்லை. விஷயம் தெரிந்தவுடன், இளைஞர் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அந்த இளைஞர் மற்றும் கர்ப்பிணிக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று காலை அந்த இளைஞர் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

.