This Article is From Oct 04, 2018

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளம்பெண்!

மும்பையில் மின்சார ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த இளம்பெண் தவறி கீழே விழுந்ததும், உடன் பயணித்த சக பயணிகளில் ஒருவர் அந்த பெண்ணின் டி-ஷர்ட்டை பிடித்து தூக்கியுள்ளார்.

போனில் பேசிய படி பயணித்ததால் கீழே விழுந்த பெண்.

Mumbai:

மும்பை; மும்பையில் மின்சார ரயிலிருந்து கீழே விழுந்த 17 வயது பெண், சக பயணியால் தக்க சமயத்தில் காப்பாற்றப்பட்டார். இந்த சம்பவத்ததின் வீடியோ காட்சிகள் தற்போது சமூகவளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மும்பையின் தானே பகுதியில் வசிக்கும் அந்த இளம்பெண் ரயிலில் இருந்து விழுந்ததும் சக பயணியால் காப்பாற்றப்பட்டார். அந்த சமயத்தில் அருகிலிருந்த தண்டவாளத்தில் மற்றொரு ரயிலும் சென்றுள்ளது. இருப்பினும் ஒரு சில நொடிகளில் அந்த பெண்ணின் டி-ஷர்ட்டை பிடித்து தூக்கி அந்த பெண்ணை மீண்டும் ரயில் பெட்டிக்குள் மீட்டு கொண்டு வந்துவிட்டார் அந்த பயணி.

இதைத்தொடர்ந்து அடுத்த ரயில் நிலையம் வந்ததும் அந்த பெண்ணுக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணுடன் பயணம் செய்தவர்கள் கூறும் போது, ரயிலில் கூட்டம் இல்லாத போதும் அந்த பெண் படியில் தொங்கியபடி வந்தார் என குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அந்த பெண் ரயில்வே போலீசாரிடம் கூறும் போது, ரயில் படிக்கட்டில் போனில் பேசிய படி வந்தேன். அப்போது பிடிமானமின்றி கீழே விழுந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
 

.