This Article is From Jul 30, 2018

ராஜஸ்தானில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்து, கழுத்து நெறித்துக் கொலை!

கடந்த ஐந்து மாதங்களில், ஜாலாவார் பகுதியில் இரண்டாவது முறையாக பாலியல் வன்கொடுமை குற்றம் நடைப்பெற்றுள்ளது

ராஜஸ்தானில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்து, கழுத்து நெறித்துக் கொலை!
Jhalawar, Rajasthan:

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜெய்பூர் நகரில் இருந்து 340 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜாலாவார் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை அன்று காணாமல் போனார். எனவே, சிறுமியின் பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதனை அடுத்து, வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வந்தது.

கடந்த சனிக்கிழமை அன்று, சிறுமியின் வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில், சிறுமியின் உடலை காவல் துறையினர் கைப்பறினர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து நெறித்து சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு குறித்து பேசிய ஜாலாவார் பகுதி உயர் காவல் துறை அதிகாரி ஆனந்த் ஷர்மா “சிறுமியின் உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விசாரிக்க தடயவியல் நிபுணர்கள் கொண்ட குழு, மோப்ப நாய் கொண்ட குழு ஜாலாவாருக்கு வர உள்ளனர். குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார்” என்று தெரிவித்தார்.

கடந்த ஐந்து மாதங்களில், ஜாலாவார் பகுதியில் இரண்டாவது முறையாக பாலியல் வன்கொடுமை குற்றம் நடைப்பெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், வயல் வெளியில் விளையாடி கொண்டிருந்த ஆறு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், “அரசின் அலட்சியத்தால், பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நடைப்பெற்று வருகின்றன. குற்றவாளிகள் அச்சம் இன்றி இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார்.

.