This Article is From Jan 19, 2019

''பொய்களின் உற்பத்தியாளர், மொத்த வியாபாரி பிரதமர் மோடி''- லாலு மகன் பேச்சு

மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டு பேசினார்.

பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக தேஜஸ்வி உள்ளார்.

Kolkata:

பொய்களை உற்பத்தி செய்பவர், அதன் மொத்த வியாபாரி, விநியோகம் செய்பவர் பிரதமர் மோடி என்று லாலுவின் மகன் தேஜஸ்வி விமர்சித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற மாநாட்டில் தேஜஸ்வி பேசியதாவது-

பாஜகவுடன் சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகள் கூட்டணி வைத்து விட்டன. பாஜகவுடன் நாம் ஒத்துப்போனால் அவர்களை அரிச்சந்திரர்களுடன் சேர்த்து விடுவார்கள். 

ஆனால் பாஜகவினருக்கு அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நினைவுபடுத்தினால், அவர்களை எதிர்த்தால், நாட்டை ஒற்றுமைப்படுத்தினால் அவர்கள் நம்மை ஒடுக்க ஆரம்பித்து விடுவார்கள். நாங்கள் பாஜகவுக்கு அடிபணியவில்லை. 

பொய்களை உற்பத்தி செய்வது, அதன் மொத்த வியாபாரி, விநியோகம் செய்வது என அனைத்தையும் மோடி செய்து வருகிறார்.

இவ்வாறு தேஜஸ்வி பேசினார். 

.