This Article is From Aug 07, 2018

காலை 4 மணி முதல் ராஜாஜி அரங்கில் கருணாநிதிக்கு அஞ்சலி செல்லுத்தலாம் - தி.மு.க

கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது

காலை 4 மணி முதல் ராஜாஜி அரங்கில் கருணாநிதிக்கு அஞ்சலி செல்லுத்தலாம் - தி.மு.க

மறைந்த தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு இரவு 8.30 மணி முதல் 1 மணி வரை குடும்பத்தினர் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. பின் 3 மணி வரை சி.ஐ.டி காலனி இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு இறுதி மரியாதை செய்வர். பின்னர், காலை 4 மணி முதல் ராஜாஜி அரங்கில் மக்களின் அஞ்சலிக்கு கருணாநிதியின் உடல் வைக்கப்படும் என்று தி.மு.க தலைமக் கழகம் அறிவித்துள்ளது.

நாளை பிற்பகல் வரை அங்கு கருணாநிதியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பின் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

மெரினாவில் இடம் ஒதுக்க முயலவில்லை என்று தமிழக அரசு அறிவித்ததால், கருணாநிதியின் உடல் எங்கு அடக்க செய்யப்படப் போகிறது என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
 

.