This Article is From Oct 18, 2018

ஆண்களும் #meToo ஆரம்பித்தால் என்னவாகும்? பொன்.ராதாகிருஷ்ணன்

#meToo இயக்கம் நாட்டின் மதிப்பையும் பெண்களையும் களங்கப்படுத்துகிறது. ஆண்களும் இவ்வாறு ஆரம்பித்தால் என்னவாகும் நிலைமை? யோசித்துப் பாருங்கள்

ஆண்களும் #meToo ஆரம்பித்தால் என்னவாகும்? பொன்.ராதாகிருஷ்ணன்

#meToo இயக்கம் நாட்டின் மதிப்பையும் பெண்களையும் களங்கப்படுத்துகிறது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Karur (TN):

சில வக்கிரபுத்தியுள்ளவர்களால் தொடங்கப்பட்டதே #meToo இயக்கம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் #meToo குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்த அவர், நாம் அனைவரும் பெண்களுடன் நட்புடன் பழகுகிறோம். அப்படிப்பட்ட சூழலில் நான் 5ம் வகுப்பு படிக்கும்போது அப்படி, இப்படி நடந்துக்கிட்டாங்க என்று கூறுவதா? இவையெல்லாம் எந்த வகையில் நியாயம்.

போகிற போக்கில் ஒருவா் உங்கள் மீது சேற்றை வாரி வீசினால் ஏற்றுக்கொள்ள முடியுமா? இதேபோல் ஆண்களும் ஆரம்பித்தால் ஏற்றுக்கொள்ள முடியுமா? போகிற போக்கில் பெண்கள் மீது குற்றம் சென்னால் எவ்வளவு அவமானம்?

சில வக்கிரபுத்தியுள்ளவர்களால் தொடங்கப்பட்டதே #meToo இயக்கம். #meToo இயக்கம் நாட்டின் மதிப்பையும் பெண்களையும் களங்கப்படுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.

.